மலேஷியாவில் நடைபெற்ற 35 ஆவது ஆசிய மெய்வல்லுநர் - 2023 (35th Malaysian international open masters athletics championships) போட்டியில் சாதனை படைத்த புத்தளம் மண்ணின் மைந்தர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராட்டியுள்ளார்.
உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்ற ஹுமாயூன் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற துபைல் ஆகியோரை வாழ்த்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
"இப்போட்டியில் இவர்கள் பெற்ற சாதனைகள் புத்தளம் மண்ணைப் பெருமைப்படுத்தியுள்ளது. ஒரே தாயின் புதல்வர்களான இவர்களின் முன்னுதாரணம் ஏனைய தாய்மார்களின் பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தும்.
புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்களான இவ்விரு சகோதரர்களும் உடற்கல்விப் போதனாசிரியர்களாவர். போதித்தது போல சாதித்தும் காட்டியுள்ள இவர்களின் வழிநடத்தல்களைப் பின்பற்றி, ஏனையோரும் தேசிய மற்றும் சர்வதேசத்திலும் கீர்த்தி பெற வாழ்த்திப் பிரார்த்திக்கின்றேன்."

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK