முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்க வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரது அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பீ. சேனாநாயக்கவினை ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்க உள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றமையினால் அவரை குறித்த பதவியிலிருந்து நீக்கும் நோக்கிலேயே ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
புனித மக்கா, மதீனா மற்றும் அதனுடன் தொடர்புடைய நகரங்களை நிர்வகிக்கும் நோக்கிலும், புனித ஹஜ் கடமையினை நேரடியாக கண்காணிக்கும் வகையிலுமே ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரல் நியமிக்கப்படுவது வழமையாகும்.
புனித மக்கா நகரிற்குள் முஸ்லிம் அல்லாத ஒருவர் நுழைய முடியாது என்பதனால் அனைத்து நாடுகளும் இப்பதவிக்கு முஸ்லிம் ஒருவரை நியமிப்பதே வழமையாகும். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சவூதிக்கான இலங்கைத் தூதுவராக வீ. கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டு பின்னர் அந்நாட்டின் கடுமையான அழுத்தம் காரணமாக ஆறு மாதங்களின் பின்னர் அவர் திருப்பி அழைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK