வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இன்று முதல் பல வகைகளை சேர்ந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லொறிகள், பஸ்கள், வேன்கள் மற்றும் டபுள் கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளதாக, அதன் செயலாளர் அரோஷ ரொட்ராகோ தெரிவித்தார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனை விலையை இன்னும் அறிவிக்க முடியாது எனவும், அவர் கூறினார்.
வாகனங்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கியமைக்காக அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், அரோஷ ரொட்ராகோ மேலும் தெரிவித்தார்.

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK