ரியாஜ் பதியுதீன் அடிப்படை உரிமை மனு தாக்கல் - FLASH NEWS - TAMIL

ரியாஜ் பதியுதீன் அடிப்படை உரிமை மனு தாக்கல்


எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.பீ ஜயசேகர, அதன் பணிப்பாளர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன்னை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி முதல் முறையாக கைது செய்யப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய சரியான காரணங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்பட்ட போதிலும் அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்