ஏழைகளின் துயர் துடைக்க முன்வந்த YWMA: வருடாந்த ஜகாத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொதிகள் பண உதவிகள் துவாலைகள் (Towels) பகிர்ந்தளிக்கப்பட்டன இந்த மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் திருமதி. ஹலீதா ஷைதீன் திருமதி. மசாஹிரா ஜாபிர் திரு. பாரூக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முறையான நடைமுறைகளின் கீழ் இந்த உதவிகள் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டன. YWMA அமைப்பின் இந்தத் தொடர்ச்சியான சமூகப் பணிகளைப் பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிகழ்வில் இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய பவாஸா தாஹா உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.


















































Post a Comment