எதிர்க்கட்சி தலைவராகும் நாமல் ராஜபக்ஷ - FLASH NEWS - TAMIL

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல் ராஜபக்ஷ


எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்பிருக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், பசில் ராஜபக்சவின் நடவடிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்ல உள்ளது. அத்துடன் நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்புள்ளது.

மேலும் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாசவை இணைக்கும் நடவடிக்கை ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில்,சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியினர்,தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க உள்ளனர் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்