சாய்ந்தமருதில் இதுவரை காலமும் இயங்கி வந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயம் இன்று அம்பாறை மாவட்ட காரியாலயத்திற்கு மாற்றப்படுவதாக இருந்தது.

குறித்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், எச்.எம்.எம்.ஹரீஸ், இஷாக் றஹூமான் மற்றும் அலிசப்றி றஹீம் ஆகியோர் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களைச் சந்தித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த காரியாலய இடமாற்றம் நிறுத்தப்பட்டதோடு குறித்த காரியாலயம் தொடர்ந்தும் சாய்ந்தமருதிலேயே இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.