பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இன்று (28) செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளதெனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டிலும் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK