தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி - FLASH NEWS - TAMIL

தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி


லங்கா பிரிமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது .

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற கன்டி டஸ்கர்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய கன்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 157 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய தம்புள்ள வைக்கிங் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தம்புள்ள வைக்கிங் அணியின் அஞ்சலோ பெரேரா தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்