இலங்கை- பங்களாதேஷ் போட்டித் தொடர் ஒத்திவைப்பு! - FLASH NEWS - TAMIL

இலங்கை- பங்களாதேஷ் போட்டித் தொடர் ஒத்திவைப்பு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிகெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிகெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகளை நடத்துவதற்கான சூழ்நிலை இலங்கையில் இல்லாத நிலையில், தமது வீரர்களை அனுப்புவதற்கான வாய்ப்பு இல்லை என பங்களாதேஷ் கிரிகெட் சபை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையிலேயே, இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித் தொடரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிளைக் கொண்ட கிரிகெட் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையில் நடைபெறவிருந்தது. இதேவேளை, டெஸ்ட் தொடருக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஶ்இலங்கை கிரிகெட் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்