ஈரான் மீதான அத்துமீறல்கள்: இலங்கைக்கான தூதுவர் அலிசெரா டெல்கோஷ் கண்டனம்!
ஈரானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சீயோனிச ஆட்சியும் (Zionist regime) அமெரிக்காவும் அண்மையில் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார். சர்ச்சைக்குரிய 'ஐரிஸ் டேனா' கப்பல் விவகாரம் தொடர்பான விரிவான பின்னணிகளையும், அது குறித்த ஈரானின் தார்மீக விளக்கங்களையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்புடன் இணைந்ததாக ஒரு விசேட புகைப்படக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்மினாப் பெண்கள் பாடசாலை (Minab Girls’ School) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்த மாணவிகளின் நினைவாக புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஈரானின் மறைந்த உன்னதத் தலைவரின் (Supreme Leader) தியாகத்தைப் போற்றும் அரிய புகைப்படங்களும் மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
ஈரான் மீதான வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்துள்ள சூழலில், தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதை இந்த ஊடக சந்திப்பின் மூலம் தூதுவர் மீளவும் வலியுறுத்தியுள்ளார்.




Post a Comment