கனமழையால் பல இடங்களில் பாரிய மண்சரிவு - FLASH NEWS - TAMIL


கனமழையால் பல இடங்களில் பாரிய மண்சரிவு

 

இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவில் இன்று (31) பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

அmந்த வகையில், பலாங்கொடை- பெலிஹுலோயா மேல் கலகம வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட விஹாரவெல கிராம சேவைப் பிரிவில் பல இடங்களில் மேல் கலகம வீதி மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக இம்புல்பே அனர்த்த நிவாரண சேவை அதிகாரி அமில சம்பத் தெரிவித்துள்ளார்.

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் மற்றும் பாறைகளுடன் சேர்ந்து மண் மலைகள் வீதியில் விழுந்துள்ளதாகவும் சமனல வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.