மலையகத்திற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கொட்டகலை மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சரிந்த மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.