இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையின் அறுகம் விரிகுடா பகுதி மற்றும் தீவின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள ஏனைய கடற்கரைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு தேசிய பாதுகாப்பு சபை அறிவிப்பு விடுத்துள்ளது.


இலங்கையில் தாக்குதல் இடம்பெற வாய்ப்பு உள்ளதன் காரணமாக, சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கான பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது