இன்று புத்தளத்தில் நடைபெற்ற ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் காரியாலய திறப்பு விழா கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் M. H. M. நவாவி அவர்கள் கலந்துகொண்டு அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சிந்தகு அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் ஜவுசி ஜமால்தின், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஜேசுதாசன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிக்காக பாடுபடும் பல அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.