ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பியகம தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் நளீன் திசாநாயக்க மற்றும் பியகம பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை நல்கும் நோக்கில் இன்று(28) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். 

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா முன்னிலையிலயே இவ்வாறு இணைந்து கொண்டனர். 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா நகர சபைக்கு சுயேட்சை குழு 01 இல் போட்டியிட முன்வந்த உறுப்பினர்களும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டனர்.