எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) தெரிவித்தார்.

தனியாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு அனைவரது ஆதரவும் தேவை எனவும் தெரிவித்தார்.

காலி நகர மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற “எக்வ ஜயகமு” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

விவசாயத்தை நவீனமயப்படுத்தி, புதிய கைத்தொழில்களை நாட்டிற்கு கொண்டு வந்து, இளைஞர்களுக்கான புதிய நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அது தனது கடமை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஜனாதிபதிக்கு ஆதரவாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா, ஜனநாயக இடதுசாரி முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய கலாநிதி கயாஷான் நவநந்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் ஜனாதிபதிக்கு ஆதரவாக மேடையில் நின்றமை விசேட நிகழ்வாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 41 அமைச்சர்கள் எக்வ ஜயகமு நாங்கள் காலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காலி மாவட்ட மொட்டுக் கட்சி தலைவர் ரமேஷ் பத்திரன, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.