பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி - FLASH NEWS - TAMIL


பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி


உன்னதமான பௌத்த தர்மத்தின் போதனைகளைச் சுமந்துகொண்டு எமது நாட்டுக்கு வருகைதந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதி தினம், இலங்கை வாழ் பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.

அது குளங்கள், தூபிகள், கிராமங்கள் மற்றும் விகாரைகள் என்ற எண்ணக்கருவுடன் தூய சமய தத்துவத்தை தேசம் எங்கும் பரப்பி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயப் பொருளாதாரம் நிலவிய ஒரு சகாப்தத்தின் ஆரம்பமாகும். அது சமயம், சாசனம், கலாசாரம், சூழல், சமூக விழுமியங்கள் மட்டுமின்றி பல்வேறு புதிய எண்ணக்கருக்கள் சமூகமயப்படுத்தப்பட்ட காலகட்டமாகும்.

இந்த மகத்தான தத்துவத்தின் உன்னதத் தன்மையால் இலங்கையர்களான நாம் உலகில் எவருக்கும் சளைக்காமல் ஒரு உன்னத தேசமாக தலைநிமிர்ந்து நிற்கமுடியுமானது. அந்த உன்னத பண்புகளை உள்ளடக்கிய சமுதாயத்திற்காக இந்த பொசன் நோன்மதி தினத்தில் சரியான நடைமுறைகளை கடைப்பிடிப்போம்.

 

தினேஷ் குணவர்தன (பா.உ.)

பிரதமர்,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 ஜூன் 20ஆந் திகதி


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.