இன்றைய தினம் (18) ஹோராப்பொல கிராமத்தில் மகளிர் சங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பொதுக் கூட்டத்தில் பெண்கள் 24 பேர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். 


இன்று சமூர்த்திக் கூட்டமும் இருந்ததால் அதிகமானவர்களுக்கு கலந்து  கொள்ள முடியாமல் போனதையிட்டு கவலையடைந்தார்கள். 5 பேர்களைக் கொண்ட நிருவாகம் ஒன்றையே அமைக்க எதிர்பார்த்திருந்தோம். 

ஆனால் அதிகம் ஆர்வம் காட்டுவது அவதானிக்கப்பட்ட காரணத்தால் 

வந்தவர்களையும் வந்துகொள்ள முடியாமல் போனவர்களில் முக்கியமானவர்களையும் சேர்த்துக் கொண்டு 9 பேர்களைக் கொண்ட நிருவாகம் ஒன்று ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது. 

 தலைவர்க S.L. நளீபாவும் உ. ப. தலைவராக J.ரிஸ்மியாவும்   செயலாளராக A.K ரஹீமாவும் உப. செயலாளராக M.முர்ஷிதாவும் பொருளாளராக K.முர்ஷிபாவும் கணக்கு பரிசோதகராக JJ.ஹஸீனவும் (ஆசிரியை) நிருவாக உறுப்பினர்களாக S.இர்பானாவும் J.ஹஸீனாவும்,  U.L.F  ஹிமாயாவும் M.L.F.சுக்ரியாவும் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர் கலந்து கொண்ட அனைவரும் உறுப்பினர்களாக இருந்து கொண்டு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.