அஷ்ஷெய்க் ரிஸான் ஸைன் (நளீமி) காலமார்.

பதுளை மாவட்ட காதி நீதிபதியும், OXFORD  International collage பணிப்பாளருமான அஷ்ஷெய்க் ரிஸான்  ஸைன்  (நளீமி) அவர்கள் பதுளை வைத்தியசாலையில் சற்றுமுன் காலமார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எதிர்பார்க்காத இந்த செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. அஷ்ஷெய்க் ரிஸான் ஸைன் ( நளீமி ) அவர்கள் மிகவும் அமைதியானவர். 

"பெண்கள் இலக்கிய, எழுத்துத் துறைகளில் சிறந்த நிலையை அடைய வேண்டும்" என்று நல்லபல அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். சிறந்த ஆளுமைகள் எப்போதுமே அடக்கமாகவும் பணிவோடும் இருப்பார்கள் என்பதற்கு  எடுத்துக்காட்டாக விளங்கியவர்.  சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளரும் கூட. பதுளை மண் ஒரு பெறுமதியான அறிவுச் சுடரை இழந்திருக்கிறது.. 




வல்ல இறைவன் அவரைப் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்..

Comments