இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இளைஞன் - FLASH NEWS - TAMIL


இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இளைஞன்


புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்தில் பயணித்த இளைஞனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.


அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே விபத்தில் சிக்கியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த இளைஞன் இரண்டு புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட நிலையில், புகையிரதத்தில் பயணித்த ஏனையவர்கள் அவரைப் பார்த்து புகையிரதத்தை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.