க.பொ.த உயர்தர - புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்
.jpeg)
Post a Comment