தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு
பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை நிராகரிக்க உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று இரண்டாவது நாளாக நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அனில் ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பின்னர் தனது தீர்மானத்தை அறிவித்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழு இணக்கத்துடன் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK