புதிதாக இடம்பெற்றுவரும் எரிபொருள் வர்த்தகம் குறித்து எச்சரிக்கை
லங்கா ஐ.ஓ.சியினால் 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய கொள்கலன்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்று முன்தினமும் 23 கொள்கலன்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்பட்டதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத தற்போதைய சூழ்நிலையில், மற்றுமொரு எரிபொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஒன்று இடம்பெறுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ எமதுச் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
அவ்வாறு வழங்கப்படும் எரிபொருட்களின் தரம் தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எனவே அந்த சட்டவிரோத வர்த்தகம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK