வத்தளையில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணம் என்ன? - FLASH NEWS - TAMIL


வத்தளையில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணம் என்ன?


வத்தளை - எலகந்த ஹெந்தல வீதியில் இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இன்று பிற்பகல் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 


மட்டக்குளி - அலிவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து ரீ-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு ரீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்காக களனி காவல்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் சில காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.