அதிகார போதை தலைக்கேரிய ராஜபக்சக்களின் அராஜகம் ஆரம்பம். - FLASH NEWS - TAMIL


அதிகார போதை தலைக்கேரிய ராஜபக்சக்களின் அராஜகம் ஆரம்பம்.



ராஜபக்சக்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள் என நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.அதுவே இன்று நடந்துள்ளது.

நாட்டில் இன்று எரிபொருள், கேஸ், மருந்து பால்மா என ஒன்றுமே இல்லை.இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்களின் கடமை. ஆனால் ராஜபக்சக்கள் தமது அதிகாரத்தை எவ்வாறு தக்க வைக்கலாம் என்றே சிந்திக்கின்றனர்.

இன்று ராஜபக்சக்களின் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் இலங்கை ஜனநாயகத்தில் விழுந்த கரும்புள்ளி.

இவ்வாறான தாக்குதல்கள் இலங்கையை மீண்டும் ஜூலை கலவரத்துக்கு கொண்டு செல்லும்.


ஆகவே எமது நாட்டை பொருளாதாரத்திலும் அரசியல் ரீதியிலும் படுகுழியில் தள்ளியுள்ள ராஜபக்சக்களை நாம் விரட்டும் வரை எமது போராட்டம் தொடர வேண்டும்.

அந்த போராட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் என்றும் துணை நிற்போம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.