றம்புக்கனை காவல்துறை பிாிவில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல் - FLASH NEWS - TAMIL


றம்புக்கனை காவல்துறை பிாிவில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்


றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை காவல்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை பேச்சாளர், றம்புக்கனை பகுதியூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் கோரியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.