நாடு மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதனை இப்படியே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.முழு சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனமுன்னாள் ஜனாதிபதி சபையில் உரையாற்றும்போது கூறினார்.
அதேநேரம், 20ஆவது திருத்தத்தை நீக்கி, 19ஆவது திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்,
அவசரகால நிலைமை அமுல்படுத்தியுள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். எனவே, இன்று முதல் நாங்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளோம். அதன்படி, எங்களுடைய 14 உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படவுள்ளோம். என்றார்.

0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK