உரிய நிதிக்கணக்குகளை சமர்ப்பிக்க தவறிய ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பொது நிறுவனங்களுக்கான கோப் குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஆராயும் முகமாக நேற்று கோப் குழு கிரிக்கட் அதிகாரிகளை அழைத்திருந்தது.
எனினும் இதன்போது கிரிக்கெட் அதிகாரிகள் உரிய நிதிக்கணக்குகளை சமர்ப்பிக்க தவறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக கணக்குகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியது.
அத்துடன் நிதி விடயங்கள் தொடர்பில் கோப் குழு எதிர்ப்பார்த்த விடயங்களை தெரிவிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் தயாராக இருக்கவில்லை. இந்தநிலையில் சந்திப்பு நிறுத்தப்பட்டு ஒரு மாததக்காலத்துக்குள் மீண்டும் அறிக்கைகளுடன் கோப் குழுவின் முன் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK