நாட்டில் ஒன்றுகூடல் மற்றும் நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுப்பு - FLASH NEWS - TAMIL


நாட்டில் ஒன்றுகூடல் மற்றும் நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுப்பு


பிரித்தானியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டமையை அடுத்து ஒன்றுக்கூடல் மற்றும் நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது என்று பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

எனினும் திருமணம் மற்றும் மரண வீடுகளை தவிர்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே திருமணம் மற்றும் மரண வீடுகளை தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளுக்கு அனுமதிக்கோரி பொதுமக்கள் பொது சுகாதார அதிகாரிகள் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்று சம்மேளனத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் திருமணம் மற்றும் மரண வீடுகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் எச்சரித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.