கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார் - FLASH NEWS - TAMIL


கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

 


கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார்.

சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பிட்ட வீடியோவில் தனது மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு ஏன் உரிய பலன்கிடைக்காமல் போனது என்பதற்கான விளக்கத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் மது அருந்தினாலோ, சிகரெட் பயன்படுத்தினாலோ அல்லது மாமிசம் உட்கொண்டாலோ தனது மருந்து பலனளிக்காது என, அவர் கூறியுள்ளார்
.

இது குறித்து முன்னரே தான் அவர்களுக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிராச்சி ஆகியோர் தம்மிக பண்டாரவின் பாணி மருந்தை அருந்திய போதிலும், அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.