பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு - FLASH NEWS - TAMIL


பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு


பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள் என்று கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி தெரிவிக்கின்றது.

06 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியிருந்தனர். அவர்களில் இருவர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள்.

பிரித்தானியாவுக்கான விமான சேவைகள் இரத்து செய்யவிருந்த திகதிக்கு முன்னதாகவே அங்கிருந்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியிருக்கின்றனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான இருவருடன், இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த ஏனைய நான்கு மேலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுமார் 40 நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்தினை முழுமையாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.