உலகில் 194 நாடுகள் கொரோனாவால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றன - அசாத் சாலி - FLASH NEWS - TAMIL


உலகில் 194 நாடுகள் கொரோனாவால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றன - அசாத் சாலி


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்ய முடியும் என வைரஸ் தொடர்பான சகல நிபுணர்கள் கூறும் போது அரசாங்கம் அதற்கான அனுமதி வழங்காமல் இருப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 120 பேர் முஸ்லிம்கள்.

உலகம் முழுவதிலும் உள்ள 194 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளன. இப்படி இருக்கும் போது இலங்கை எந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய மறுத்து வருகிறது?.

சளி கெட்டு போகும் போது கொரோனா வைரஸ் தொற்று நேர்மறையாகும். தொழிநுட்ப குழுவுக்கு இது புரியவில்லை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.