ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது: கயந்த கருணாதிலக்க - FLASH NEWS - TAMIL


ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது: கயந்த கருணாதிலக்க


ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மீளவும் பேசப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்குவதாக அரசாங்கம் கூறிய முதல் சந்தர்ப்பம் இதுவல்ல எனவும் கடந்த பெப்ரவரி மாதமும் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என பிரதமர் கூறியதாகவும், தற்பொழுது ஜனவரி முதல் வழங்குவதாக கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறிய போதிலும் நடைமுறையில் அது கிடையாது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.