நாளையதினம் இரண்டு மணி நேரம் கூடும் நாடாளுமன்றம். - FLASH NEWS - TAMIL


நாளையதினம் இரண்டு மணி நேரம் கூடும் நாடாளுமன்றம்.


இலங்கையின் நாடாளுமன்றம் நாளைய தினம் இரண்டு மணி நேர கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார் என்று நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாளை 3 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

இதன்போது வாய்வழி கேள்விகளுக்கு எந்த நேரமும் ஒதுக்கப்படாது, என்று நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இதேவேளை நாடாளுமன்ற வரலாற்றில் அமர்வுகளின் போது முதல்முறையாக நாளைய தினம் செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.