இலங்கையில் 22வது கொரோனா மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல் - FLASH NEWS - TAMIL


இலங்கையில் 22வது கொரோனா மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்


இலங்கையில் நேற்று இரவு 21வது கொரோனா மரணம் பதிவாகியது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த மரணம் 22 கொரோனா மரணம் என கூறுவதற்கு சிலர் முயற்சிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கம்பஹா நகர முதல்வர் எரங்க சேனாநாயக்கவின் பேஸ்புக் பதிவும், அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் உள்ள விடயங்களில் காணப்பட்ட வித்தியாசங்களே இந்த குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.

இது வீட்டில் நிகழ்ந்த மரணமாக கம்பஹா நகர முதல்வர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். எனினும் இது வைத்தியசாலையில் ஏற்பட்ட மரணம் என அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் மரணம் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்திற்கமைய இது 22 ஆவது மரணம் என சிலர் கூற முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கம்பஹா நகர முதல்வரிடம் வினவிய போது இந்த இரண்டு மரணங்களும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

(tamilwin)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.