நாடாளுமன்ற ஊழியர் திடீர் மரணம் - FLASH NEWS - TAMIL


நாடாளுமன்ற ஊழியர் திடீர் மரணம்


நாடாளுமன்ற சமையலறையில் பணியாற்றி வந்த சமையல் உதவியாளர் திடீரென உயிரிழந்துள்ளார்.நாடாளுமன்றத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது திடீர் சுகவீனம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவர் இறக்கவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்ததுடன், நேற்றையதினம் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஊழியர் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளதாக சுகாதார துறையினர் கூறியதாக படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.