டயானா கமகே (MP) பணம் பெற்றாரா? - FLASH NEWS - TAMIL


டயானா கமகே (MP) பணம் பெற்றாரா?


20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக அரசாங்கத்திடமிருந்து எதனையும் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே தெரிவித்துள்ளார்.

சிலர் நான் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர், ஆனால் நாங்கள் ஒரு சதம் கூட அரசாங்கத்திடமிருந்து பெறவில்லை,வலுவான ஜனாதிபதியே நாட்டிற்கு அவசியம் என்பதாலேயே நான் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருமளவு பணத்தை செலவழித்து ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் அவரது கைகளை கட்டி ஏன் கடலில் வீசவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே நீடிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.