பரீட்சையில் மாணவருக்கு உதவிய மேற்பார்வையாளர் கைது - FLASH NEWS - TAMIL


பரீட்சையில் மாணவருக்கு உதவிய மேற்பார்வையாளர் கைது


கல்வி பொதுத்தராதர உயிர்தர பரீட்சையில் பரீட்சாத்தி ஒருவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வாதுவ மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பரீட்சை மண்டபத்தின் மேலதிக மேற்பார்வையாளர் காவல்துறையினரிடம் முறையிட்டதை அடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மேற்பார்வையாளரான ஆசிரியர் பரீட்சை ஆணையர் ஜெனரலின் பரிந்துரையின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் பரீட்சை ஆணையாளருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.