2025 ஆண்டுக்குள் சுத்தமான குடிநீர் - FLASH NEWS - TAMIL


2025 ஆண்டுக்குள் சுத்தமான குடிநீர்

2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் 24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுபீட்சமான எதிர்காலம் என்ற ஜனாதிபதியின் கெள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குடிநீர் என்ற திட்டம் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 47 இலட்சம் குடும்பங்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ள ஆறுகள் மற்றும் நீர் நிலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் நீர் பெற்றுக்கொள்ளும் கிணறுகளை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீர் விநியோகத்தின் போது, சாலைகளில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும், அதிக செலவீனங்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.