கோட்டாபய கொடுத்த அமைச்சு பதவியை நிராகரித்த உறுப்பினர்! தலதா மாளிகையிலிருந்து வெளியேற்றம்
புதிய அமைச்சரவையில் வழங்கப்பட்ட அமைச்சு பொறுப்பு ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியேறிச் சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கண்டி தலதா மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன்போது, 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பதவியேற்பு நிகழ்வில் 39 இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்ஷவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த அமைச்சு பதவியை கடுமையாக நிராகரித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ, தனக்கு பிரதான அமைச்சு பதவி ஒன்றை கோரியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து தலதா மாளிகையிலிருந்து அவர் வெளியேறியுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK