மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK