எஸ்.எம்.சந்திரசேன மற்றும் துமிந்த திஸாநாயக்க சுய தனிமைப்படுத்தலில் - FLASH NEWS - TAMIL


எஸ்.எம்.சந்திரசேன மற்றும் துமிந்த திஸாநாயக்க சுய தனிமைப்படுத்தலில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் ராஜாங்கனய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி கலந்துக்கொண்ட மரணச் சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டதன் காரணமாகவே அவர்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்கள் இருவரும் அந்த ஆலோசனைகளை பின்பற்றாது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த மரணச் சடங்கில் கலந்துக்கொண்டு பலர் ஏற்கனவே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.