வடக்கில் பாரிய விலையில் விற்பனையாகும் மஞ்சள்! - FLASH NEWS - TAMIL

வடக்கில் பாரிய விலையில் விற்பனையாகும் மஞ்சள்!

வட மாகாணத்தில் பாரிய விலையில் மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர்.
மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்