ஈரான் அதி உச்சத் தலைவர் கொல்லப்பட்டமை உறுதியானது - FLASH NEWS - TAMIL


ஈரான் அதி உச்சத் தலைவர் கொல்லப்பட்டமை உறுதியானது

 


ஈரான் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 


முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர். 

அத்துடன் உயிரிழந்த அலி கமேனியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. 

எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. 

இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது. 

முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்தது. 

இதேவேளை ஈரானில் 40 நாட்கள் பொதுத் துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் 7 நாட்களுக்கு அங்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் 40 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

அவர்களில் 6 சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.