மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் திருடர்களின் தொல்லை - FLASH NEWS - TAMIL


மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் திருடர்களின் தொல்லை


பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக இரவு பகல் வேளைகளில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் நோன்பு காலம் ஆகையினால் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் வீடுகளில் சுய பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அண்மையில் 18 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேக நபர்கள் மருதமுனை பகுதியில் வீடு ஒன்றின் கதவினை உடைத்து ரூபா 25 ஆயிரம் பணம் பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றை  திருடிய நிலையில் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வசதி உள்ளவர்கள் தங்களது சொத்துக்களை பாதுகாப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்துவதுடன் தமது பிரதேச பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸாருடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

மேலும் போதைப்பொருட்கள் விற்பனை பாவனை தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

எனவே பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு   கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.