சவுதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை: ரியாத் தூதரகம் முக்கிய அறிவிப்பு
அஸீம் கிலாப்தீன்
இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து, தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, உத்தியோகப்பூர்வமற்ற தகவல்களையோ அல்லது வதந்திகளையோ நம்ப வேண்டாம் என்றும், சவுதி அரேபிய அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தூதரகங்கள் வழங்கும் வழிகாட்டல்களை மட்டுமே பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள தூதரகம், கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து அடையாள ஆவணங்களையும் முறையாகப் பராமரிக்குமாறும், அவை செல்லுபடியாகும் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால் தொடர்புகொள்வதற்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய அவசர உதவி எண்களையும் தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, +966 54 947 7567 மற்றும் +966 56 982 2700 ஆகிய எண்களுக்கும், வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தகவல் பகிர +966 56 975 3380 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களைத் தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment