புனித ரமலான்: கத்தார் தூதரகத்தினால் வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்
புனித ரமலான் மாதத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் துயரினைப் போக்கும் நோக்கில், கத்தார் நாட்டின் மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கொழும்பிலுள்ள கத்தார் தூதரகம் 'கத்தார் அறக்கட்டளை' (Qatar Charity) அலுவலகத்துடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை (27) வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகித்தது.
கொழும்பிலுள்ள கத்தார் தூதரகத்தின் வர்த்தகப் பொறுப்பதிகாரி திரு. அலி சலீம் அல்-நுஐமி மற்றும் கத்தார் அறக்கட்டளையின் கொழும்பு அலுவலகப் பணிப்பாளர் திரு. மஹ்மூத் அபு கலீபா ஆகியோரின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.




Post a Comment