அப்துல் அஸீஸின் முகநூலில் இருந்து 

ரமழான்…புண்ணியம் பூத்துக் குலுங்கும் மாதம்.அள்ளி அள்ளி கொடுக்கும் மனங்கள் மலரும் மாதம். ஆனால், இதே மாதத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலையும் அதிகரிப்பதைப் பார்க்கும்போது உள்ளம் கனக்கிறது.

“இது எங்கேயோ தவறாகிப் போய்விட்டதோ?” என்ற கேள்வி மனதைத் துளைக்கிறது.

ரமழான் என்பது தெருத்தெருவாக பித்ரா கேட்டு அலைவது என்று எங்கேயும் கற்றுக் கொடுக்கப்படவில்லை.

இது கண்ணியத்தை காக்கும் மாதம்.

உதவி தேவைப்படுபவரை நாம் தேடி சென்று உதவ வேண்டும் என்பதே இதன் ஆன்மா

அவர்கள் வந்து கேட்க வேண்டிய நிலை உருவாக்குவது அல்ல.ஏனைய மாதங்களை விட இந்த மாதத்தில் மக்கள் அதிகமாக கையேந்தும் நிலை உருவாகியுள்ளது என்பது ஒரு சமூகச் சிந்தனைக்குரிய விஷயம்.

கொடுப்பது நம் கடமை;

ஆனால், கண்ணியத்தை காக்கும் வகையில் கொடுப்பதே ரமலானின் உண்மை அழகு.

என் இந்த எண்ணம் தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்.

ஆனால், ரமழானை கண்ணியத்தின் மாதமாகவே பார்க்க விரும்புகிறேன். நபியவர்கள் கொடுப்பதில் புயலாக இருந்தார்கள் என்பதை ஊண்டி சொல்வதில் பாவம் இருக்கிறதோ தெரியாது.