இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாடு ஏப்ரல் மூன்றாம் திகதி - FLASH NEWS - TAMIL


இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாடு ஏப்ரல் மூன்றாம் திகதி



இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷெஹான் திசாநாயக்க அவர்களின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் சங்கத்தின் ஏழாவது வருடாந்த மாநாட்டை ஏப்ரல் மூன்றாம் திகதி கண்டி நகரில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஹுஸ்னி அஸீஸ், சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் சம்பத் குணசேகர மற்றும் ஏனைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர் சங்கம் என்ற வகையிலும் அரசியல் கட்சி சார்பற்ற ஆசிரியர் சங்கம் என்ற வகையிலும் அனைத்து ஆசிரியர்களையும் தமது வருடாந்த மாநாட்டிற்கு அழைப்பதாக இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கத்தின் உப தலைவர் ஹுஸ்னி அஸீஸ் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.